பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

ஆனால் அதை உருவாக்க அப்போது வழி தெரியவில்லை. ஆனால் இப்போது திடீரென பற்றிக் கொண்டு எழுதி முடித்து விட்டேன். அடுத்தாற் போல ஐம்பது வருடங் களுக்கு முன்னால் தோன்றிய ஒரு வித்து இப்பொழுது துளிர்விட ஆரம்பித்துவிட்டது. மனத்தினுள் தேள் கொட்டிக் கொண்டே இருக்கிறது. கண்ணன் மற்றொரு தேளாய் பிடுங்கி எடுத்துக் கொண்டேயிருக்கிறான். ஆகவே ஒரு எழுத்தின் விதைக்கும் அதன் வளர்ச்சிக்கும் விதமோ வரையோ வகுக்க முடியவில்லை.

   எழுத்து இரக்கமற்ற எசமானி.
        மீண்டும் சந்திப்போமா?
                                                  


F2, Jai Krishna Apartments சந்திக்கும்வரை 18, Old Township Road லா.ச.ராமாமிர்தம் Ambattur சென்னை-600 053 தொலைபேசி: 6574840