பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

அலை தந்த ஆறுதல்

மில்லே! உத்துப் பார்த்திங்கன்னாக்க மூணு தடவை சுழிச்சிருக்கும் (செய்தே காட்டுகிறார்). இது எப்பவும் எடைல தான் வரும்...கொஞ்ச எடங்கள்ளதான் கடைசில வரும்... ஆனா இந்தக் கடைசில இருக்குதே ரெண்டு சுழி னா அது எடைலயும் வரும்... கடைசீலயும் வரும்.

25 வயது : அடாடாடா எப்பிடிப் புட்டு புட்டு கொழுந்த புள்ளைக்குச் சொல்ற மாதிரி சொல்றீங்க!...

பேரா இன்னொரு சங்கதி! இப்ப இந்த ரெண்டு சுழி, மூணு சுழி ன'வும், ணாவும் ஒரே வார்த்தைல வந்தாக்க பெரியவருக்குச் சின்னவர் எடம் விட்ரு

வாரு...

15 வயது . எப்பிடிங்க?

பேரா : அண்ணன், கண்ணன், திண்னன்...

25 வயது . ஆமுங்க. ஆமுங்க! அண்ணனுக்குத் தம்பி எடம் விடுதுங்க... எழுத்துங்க கூட மரியாதை தெரிஞ்சு வச்சிருக்கு...

பேரா : இட்ப பாருங்க இதுங்களை கவனிக்கனும்.

ஆணி, ஆணி

மனம், மனம்

பணி, பணி

பன் ை, பனை

இதுங்களுக்கு வித்யாசம் சொல்லுங்க பார்ப்போம். நீங்கதான் சொல்லுங்களேன். (25 வயதுக்காரரை நோக்)ெ.