பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

79


காட் :

பன் :

79

காட்சி-4

(நாட்டாமைக்காரர் வீட்டில்)

என்ன பன்னாரி! சத்திய சோதனை எப்பிடி?

அண்ணல் காந்தியோட அருளும் ஒங்க ஆசியும் இருக்றதாலெ எல்லாம் நல்லபடியாவே போய்க் கிட் டிருக்குங்கய்யா!

காட் இந்த ஆர்லயே இந்த முத்துக்காளை ஆட்டைத்கான்

பன் :

பேய் வீடுன்னு சொல்லுவாங்க...அதுலயும் இந்த செங்கமலம், அந்த முத்துக் காளைய படுத்தற பாடு! அப்பப்பா! தாங்காது. அவ சொல்றத கேட்டுக் கிட்டு இந்தப் பய தக்கா புக்கான்னு குதிக்கிற குதி இருக்கே, அப்பாடி அவுங்க ஆட்டை சரி பண்ணினா இந் , வூரையே சரி பண்ணின மாதிரி... அந்தப் புண்ணியம் ஒங்களைத்தான் சேரும்...

எல்லாம் பெரியவங்களோட நல்லெண்ணந்தாங் காரணம். ஐயா ஒங்களுக்கு ஒரு சேதி தெரியுமா? ஒங்களுக்குத் தெரியாம இருக்கது...செங்கமலத் தம்மாளே இப்ப கோர்ட்ல இருக்குற தங்களோட கேசையெல்லாம் வாபஸ் வாங்கப் போறாங்க... புல்டோஸரை வரவழைச்சு மோட்டாங்காட்டு நெலத்தை சரி பண்ணி பயிர் பண்ணப் போறாங் களாம்...ஃபில்ட்டர் பாயிண்ட் வேற போடப் போறாங்களாம்.

ஆமாம்! முத்துக்காளைகsட வந்து சொல்விப் புட்டுப் போனாப்ல.நீங்க வந்து இவ்வளவு