பக்கம்:அவள்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236 லா. ச. ராமாமிருதம்


"ஓ! மாமா இப்போ கோவிலுக்குக்கூடப் போறாரா, தேவலையே!”

"இல்லை, இதுவரை நாங்கள் அழைத்ததில்லை.” கலியாணியின் குரலில் ஏதோ நிழல் படர்ந்தது. ஏன் நீங்களும் வாங்கோளேன் எல்லோரும் போவோமே!

"எனக்கேது அம்மா அவ்வளவு கொடுப்பனை? மாமா அந்த நாளிலிருந்தே என்னை அழைச்சுண்டு போயிருந்தால் நாங்கள் இப்படியா இருப்போம்! காசியிலிருந்து கதிர்காமம் வரை இதுவரை மூணு ரெளண்டு அடிச்சிருக்கமாட்டேனா? காசிக்கும் எட்டின இடம் ஏதாவது இருக்கா? நீங்கள் சொல்லுங்களேன்!”

"ஏன் இல்லை? கைலாசமேயிருக்கிறதே! ஆனால் அங்கு போனவர் திரும்பி வருவதில்லை" என்றேன். கலியாணி எங்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள். "சரி, இன்னிக்கு உங்களுக்கு ஒழியாது என்று தெரிகிறது. நான் வருகிறேன்” என்று எழுந்தாள்.

எதிர் வீட்டுள் அவள் கட்டுள் அவள் மறையும் வரை ராதை அந்தத் திக்கையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"எத்தனை நாளாக இந்த ஸ்வீகாரம்?"

"எனக்குத் தெரியாது. நீ சொல்லித்தான் தெரியணும், அவள் பேரே இப்போத்தான் எனக்குத் தெரியும். அதுவும் உன் மூலமா...?’’

"இது இன்னொரு stunt ஆக்கும்!" திடீரென்று. தலையிலடித்துக் கொண்டாள். "ஐய, இந்த ஆண் களுடைய சபலமே!-நன்னா நெற்றிக் கண்ணைத் திறவுங்கள். எனக்குப் பழகின கண்தானே! இப்படியெல்லாம் செளகரியமாய் இருக்கணும்னுதானே இங்கு ரூம் எடுத்துண்டிருக்கேள். எனக்கு நீங்கள் எந்தச் சமாதானமும் சொல்லத் தேவையில்லை. நீங்கள் சொன்னாலும் நான் கேட்டுக்க அவசியமில்லை. நீங்கள் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/280&oldid=1497527" இலிருந்து மீள்விக்கப்பட்டது