பக்கம்:அவள்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262லா. ச. ராமாமிருதம்



யும் ஒரு சபலம், உறுத்தலாகக் கிளம்பி, அதுவே படிப்படியாக ஒரு வெறியாக மாறுவது தெரியாமலே மாறும் அந்த அவள்தையில் பாஸ்கர் மாட்டிக்கொண்டு விட்டார். அவஸ்தை நிலை, அவநிலையாக மாறிவிடுமோ போன்ற நிலை.

அவரைப் பார்த்து, தெரிந்தவர்கள் ஒருவருக்கொருவர் கண் சிமிட்டும் நிலை; பேர் எரிச்சலே படும் நிலை. குடிக்கக்கூடத் தண்ணி இல்லாமல் குடத்தைத் தூங்கிக்கொண்டு ஒவ்வொருத்தன் அலையறான் இந்த மனுஷன் சாமிமேல் கொட்டறானாம். பொம்மைமேல் கொட்டறத்துக்கு அவனும் குடத்தைத் தூக்கிக்கிட்டுப் பாலுக்கு அலையறானாம். எப்படியிருக்குது கதை:

'கூழுக்கு உப்பு இல்லை என்பாரும், பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பாரும்...”

பாட்டு எப்பவோ எழுதிப் போட்டாச்சு. இதுக்குத் தான்.

ரேணு? அவள் புருஷனை இப்படிப் புரளி செய்வது அவளுக்கு எப்படி இருந்தது? முதலில் இது என்ன அசட்டுக் கேள்வி. ஆனால் ரேணு விஷயத்தில் அந்தக் கேள்வி அசட்டுத்தனம்தானா? தோன்றக்கூடிய சந்தேகம் தான். கணவனுக்கேற்ற மனைவி. ஒருவர் வழியில் ஒருவர் குறுக்கிடுவதில்லை. இன்னிக்கு மஹா நைவேத்யத்துடன் வடை, பாயஸம் என்று ஒருமுறை சொல்லிவிட்டால் போதும். பூஜை மணி சத்தம் கேட்டவுடனேயே தாமாக வந்துவிடும். மனம் தெய்வ ஆராதனையில் முனைந்தவுடன் கடைகண்ணி, வீட்டு வேலை, நிர்வாகம் படிப்படியாக அவள் பங்குக்குச் சேர்ந்துவிட்டது. -

அதனால் என்ன? இந்த நாளில்தான் பாதிக்குமேல் ஆண்பிள்ளை வேலைகளை பெண்கள் தானே கவனித்துக் கொள்கிறார்களே, தாங்களும் உத்யோகமும் பண்ணிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/306&oldid=1497852" இலிருந்து மீள்விக்கப்பட்டது