பக்கம்:அவள்.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

462 லா. ச. ராமாமிருதம்



இன்று, நேற்று, நாளை.

தருணத்தின் விஸ்தரிப்பு.

கர்ப்ப சயனத்தினின்று நான் எழுகையில் என் தாயின் மடியினும் பெரிய தன் மடியில் என்னை ஏந்தக் காத்திருக்கும் பூமிக்கு என் அஞ்சலி. -

சடலத்தினின்று என்னை விடுவித்து என் தவத்திற்கு என்னைப் புதுப்பிக்கும் சாவுக்கு என் அஞ்சலி,

அஞ்சலியில் குவிந்த கைகளுடனேயே நான் புறப்படுகிறேன்.

-புத்ர" நாவலிலிருந்து ஒரு பகுதி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/506&oldid=1497662" இலிருந்து மீள்விக்கப்பட்டது