92
ஞானசீலன் சிரித்துக்கொண்டேயிருந்தார்.
நீங்களேதான் சிரிக்கிறீர்களா?”
பின்னே, விதிக்கா இத்தனை அர்த்தத்தோட சிரிக்கத் தெரியும் மிஸ் ரேவதி!’
‘விதி சிரிச்சு நான் முன்னே பின்னே பார்த்திருந்தால் தானே-கேட்டிருந்தால்தானே-எனக்கு அந்தத் துப்புப் புரியும்?...’
- இப்பப் புரிஞ்சுக்கங்க. நானேதான் விதி!”
ஞானசீலனின் புது விதிச் சிரிப்பு திக்கெட்டும் முழங்கியது!...
- அத்தான்...!’ வீரிட்டாள், ரேவதி.
மறுகணம் அவள் ஞானசீலனின் கால்களிலே நெடுஞ்சாண் கிடையாகச் சரண் அடைந்தாள்.
தாலி கட்டின கணவனுக்கே தன் உயிரையும் உடலையும் ஆத்ம நிவேதனம் செய்துவிட்டவளைப்போல, ஞான சீலனின் காலடியில் விழுந்து கிடந்தாள், அவள்.
ஞானசீலன் பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டவராக அங்கேயிருந்து அப்பால் நகர்ந்தார். வெற்றியைத் தேடிய பயங்கரச் சிரிப்பு பயங்கரமாகவே தொடர்ந்தது.
எங்கிருந்தோ புதிய பாட்டு ஒன்று மிதந்து வந்து தவழ்ந்தது. என்ன பாட்டு அது? என்ன ராகம் அது?
ரேவதி மெல்ல மெல்லத் தலையை உயர்த்தினாள்.
ஒரு குழந்தையைப்போல, ஞானசீலனைப் பாசத்தின் வெறியோடு ஊடுருவினாள். அவள் கண்களின் மாயத் தாகம் இன்னமும் குறையக் காணோம்.
‘அத்தான்! பெரிய மனசு பண்ணி, என்னை உங்கள் ரேவதி ஞானசீலனாக ஏற்று, உங்களோட பழைய ரேவதிக்குட்டியாக என்னை மறுபடியும் ஏற்றுக்கிட்டு,