16. தூங்காத இரவு என்று ஒன்று
அடுத்த ஐந்தாவது வினாடியில்;
கைத்துப்பாக்கி வெடித்த சத்தம் எதிரொலித்தது.
வானத்துத் தேவதைக்கு இந்தப் பொல்லாத மண் கசந்து விட்டதோ?
நெஞ்சு வெடிக்கக் கதறினார், ஞானசீலன்!
ரேவதி தனக்குத்தானே சமர்ப்பித்துக்கொண்ட இரத்தக் காணிக்கையில் சல்லாபமாகச் சாய்ந்து கிடக்கிறாள். செக்கச் சிவந்த உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன.
ரேவதி: வீரிட்டு அலறியவராக, அவளை அலுங்காமல் குலுங்காமல் வாரியெடுத்துத் தன்னுடைய மடியில் கிடத்திக் கொண்டார், ஞானசீலன். அவசரப்பட்டுட்டியேம்மா!’ அழுது புலம்பினார்; புலம்? அழுதார்.
ரேவதியின் அழகான கண்கள் அழகாகத் திறக்கின்றன. அத்தான், என்னைப் பாருங்கள். இப்ப அந்தரங்க சுத்தியோட சொல்லுங்கள். நான் யாராம்?” குறும்புப் புன்னகையுடன் வினவினாள்,
...நீ. என்னோட ரேவதி ஞானசீலன்... டாக்டர்ரேவதி ஞானசீலனாக்கும் ஞானசீலன் கதறினார்: