பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7


“அவர்... அவர் இப்ப தமிழிலேயும் படம் எடுத்துக்கிட்டு இருக்கார். வந்து... அவர் பேர்...”

பதட்டத்துடன் குறுக்கிட்டாள் ரேவதி, “பேர் எனக்கு அவசியம் இல்லை; அது என் தொழிலுக்குத் தேவையும் கிடையாது. உங்கள் கணவர், உங்களோட நோய்க்கான சிகிச்சையை நான் நடத்துறதுக்கு ஆகக் கூடிய பணம் காசைச் செலவழிக்கக் கூடியவர்தானா என்கிற விவரம் தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்.”

மந்தாகினி ஆச்சரியப்பட்டாள். டாக்டரம்மா எவ்வளவு விழிப்போடு, எச்சரிக்கையோடு செயல்படுகிறார்கள்!

“தினமும் துட்டு என்னைத் தேடி வருமுங்க!”

சோதனைகள் நுட்பமாக நடந்தன.

அந்தப் பெண் இடுப்புச் சேலையையும் மார்புச் சோளியையும் சீராக்கிக் கொண்டாள். மருந்துச் சீட்டை டம்பப் பையில் பத்திரமாக வைத்துக் கொண்டாள். “என் அத்தான் வெளியூரிலேருந்து வந்த கையோடு உங்கள் கிட்ட அழைச்சிட்டு வந்திடுவேனுங்க, டாக்டரம்மா!” என்பதாக உறுதி சொன்னாள். தொடர்ந்து,

“பீஸ்...?” என்று கேட்டாள்.

எதிர்முனைப் பதிலைக் கேட்டதும், வியப்புடன் இருபது ரூபாய்த் தாள் ஒன்றை நீட்டி விட்டு, எழுந்தாள்.

“கொஞ்சம் நில்லுங்க, இந்தாங்க உங்களோட பாக்கித் துட்டு!” என்று சொல்லி, பத்து ரூபாய்ச் சலவை நோட்டை அவளிடம் நீட்டினாள், ரேவதி.

மந்தாகினி அதை வாங்கிக் கொள்ளாமல் தயங்கினாள். “நீங்களே வச்சுக்கங்க!” என்று வேண்டினாள்.

“ஊம். பிடிங்கம்மா! நான் ஒண்ணும் பேராசைக்காரியல்ல! என்னைப் பத்தி இதுவரை வெளியிலே