41
பிப்ரவரி நாலில் நேரிலே தோன்றுவேன்.
வரும் போது, நேரிலே என் படத்தையும் தருகிறேன். போதுமா?
விதி இவ்வளவுதானே அம்மணி?
எஸ். பி. சிதம்பரம்.
ராவ் அந்நேரத்தில் அங்கிருந்து சமர்த்தாகவே காணாமல் போயிருந்தார்.
ஆகவே, அவள் பலமாகவே, சுத்தமாகவே பெருமூச்சை நெட்டிப் பிடித்துத் தள்ளி விடலானாள்.
இந்தச் சிதம்பரம் - ஆமாம்; எஸ். பி. சிதம்பரம் ஏற்கெனவே கலியாணம் ஆனவர் ஆயிற்றே? அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அக்கினியை சாட்சி வைத்து, என் ஆருயிர்த் தோழி சிந்தாமணிக்குத் திருப்பூட்டினாரே? அப்படியென்றால், அவளை இவர் மண விலக்கு செய்து விட்டாரா? இவரும் என்னைப் போல்தானோ? நினைவுகள் தாயம் ஆடின. காலையில் வந்த நாளிதழை எடுத்தாள். புரட்டினாள்.
‘ராஜகுமாரி’யில் அழகான ‘செக்ஸ்’ படம் ஓடுகிறதாமே? போகலாமா?...
ஓ... போக வேண்டியதுதான்!
கூடத்தைப் பூட்டிக் கொண்டு படி தாண்டிக் கீழே இறங்கி வந்தாள் ரேவதி.
ஐந்து, முப்பத்தொன்று.
ராவ் எழுந்து நின்றார்.
அவள் பெருமைப்பட்டுக் கொண்டாள்.
அவளுக்கு ‘டெலிபோன் டைரக்டரி’ தேவைப்பட்டது.