52
இப்போது அவளுக்கு மாற்றம் வேண்டும். நெஞ்சு, ஈட்டி முனையில் வலித்தது. "குழலி, உன் வீட்டிலே இந்நேரம் உன்னைத் தேடிக்கிட்டு இருப்பாங்கதானே?” என்று பரிவுட்ன் விசாரித்தாள்.
தனக்குத் தாலி வழங்கிய அந்தத் திங்கட்கிழமை அவளது அடிமனத்தில் கெட்டிமேளம் கொட்டியிருக்கலாம் அப்போது.
குழலி விரக்தியோடும் வேதனையோடும் சிரிக்க முயற்சி செய்தாள். "நாதியற்ற அனாதைங்க அம்மா நான்; தூரத்து அத்தைக் கிழவி ஒருத்திதான் இப்ப எனக்குச் சதம், அவங்களுக்குப் பார்வை கெட்டுப் போச்சு: அவங்களால என்னைத் தேட முடியாதுங்க டாக்டர்.”
"அப்படியானால், ஒரு காரியம் செய்வாயா?”
"நீங்கள் சொல்லோனும்னுதான் நான் காத்துக்கினு இருக்கேனுங்க.’’
“நீயும் என் கூட தாம்பரத்துக்கு வந்திடு.”
"உங்கள் இஷ்டம் என் பாக்கியம் டாக்டர்!”
ஆனாலும் உனக்கு இத்தனை குறும்பு உதவாது, குழலி!”
"போங்கம்மா... மன்னி க்க ணு ம்... போங்க, டாக்ட்ர்!”
நேரம் கடந்த நேரத்திலே, ஆள்நடமாட்டம் துளியும் இல்லாமலிருந்த பரங்கிமலைப் பகுதியில் சொகுசுக்கார் ரேவதி இல்லத்தைக் குறிவைத்துப் பறந்து கொண்டிருக்கையில், பின்புறமாகத் துரத்தி வந்த கருப்பு டாக்சி ஒன்று பாவிந்து வந்து மாருதியைக் குறுக்கே மறித்து நின்றது .