பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


தாக வேண்டிய விதியை எனக்கு நானே ஏற்படுத்திக்கிட்டேன்; எனக்கு நான்தான் விதி! அதனாலேதான், இப்படிச் செஞ்சேன். சோதனையோட நல்லதும் கெட்டதும் எனக்குப் புரிஞ்ச புதிர்தான்! அதுதான் ரேவதியோட ஜாதக சிறப்பு. ரேவதின்னா ரேவதி தான்! அவள் ஒண்னும் கொக்கு இல்லே!...விதின்னு ஒண்ணு இருந்தால்கூட, அதோட வறட்டு ஜம்பம் என்கிட்டே சாயவே சாயாது! ஈரமான ரோஜாவின்களின் பணித்துளிகள் சிலிர்த்தன.

விரகதாபத்தால் தவித்த பெண் புறா ஒன்று த. இணையை - துணையைக் கூவிக்கூவி அழைத்தபடி விட்டத்தில் வந்துகிறீச்சிட்டது; குக்கூ... கூ... கூ!"

ரேவதி ஆச்சரியம் அடைந்தாள். நாணமும் அடைந்திருக்க வேண்டும்.

என்ன அதிசயம்! பெண் புறா அழைத்ததும், அதோ அந்த ஆண் புறா தன் ஜோடியைத் தேடி ஓடி வந்து விட்டது .

ரேவதி ஏதோ இன்பமயமான கற்பனைகளில் மன்ம் லயித்தாள்; தன்னையும் மறந்த நிலையில் சங்கிலியின், பதக்கத்தைத் தடவியவளுக்கு “சுரீர்” என்றது. நெஞ்துை என்னவோ உறுத்தியது.

கண் கொட்டாமல் பதக்கத்தையே பார்வைவிட்டாள். மறுகணம், தேள் கொட்டிவிட்ட மாதிரி துடித்தாள். பதக்கத்திலே அந்தத் தாலியை தரிசித்திருப்பாளோ?

டக். டிக். டக்!

மணமகன் தேர்வுக்குரிய பேட்டிக்கும் போட்டிக்கும். உரியனவாகப் பொறுக்கப்பட்டிருந்த விண்ணப்பங்களையும் அவற்றோடு இணைக்கப்பட்டிருந்த சூப் படங்களையும் மேலும் ஒரு முறை பார்வையிட்டாக்டர் ரேவதி.