பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


உண்மையிலேயே மனிதனாகத் தலைநிமிர்ந்து நிற்க முடியும்; அப்பத்தான், நானும் சமாதானம் அடைஞ்சு, தலையை நிமிர்த்தி நடக்க முடியும்!

இப்படி மட்டும் நடந்துவிட்டால், பிரச்சினையிலே செம்பாதி தீர்ந்த மாதிரிதான்!

முதல் இரவிலே அவர் என் கையிலே செஞ்சு தந்த சத்தியத்தின்படி, அவரோட நெஞ்சிலே என்றைக்குமே நான் ஒருத்திதான் குடியிருப்பேன்னு அவர் அன்றைக்குச் சொன்னது இன்றைக்கும் சத்தியமான சொல்லாக இருந்தால், அவர்கிட்டவே என்னை இரண்டாந் தடவையாகவும் ஒப்படைச்சிடுறதிலே, என்வரையிலும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவே ஏற்படாது!...”

ரேவதி நிம்மதியான நெடுமூச்சை நெட்டித் தள்ளினாள். மஞ்சள் நீராடிய மன உணர்வுகள் புல்லரித்தன!

இப்போதும்கூட, அவளது உயர்வு மனப்பான்மை அவளது மனப்போக்கிலேயே நெறிமுறையுடன் கொடி கட்டிப் பறக்கத் தவறவில்லை.

இசைப்பாடல் காற்றிலே மிதக்கிறது.

வானொலியில் தியாகய்யரின் "வந்தனமு ரகுந்தனா" கீர்த்தனை சகானா ராகத்தில் மணம் கூட்டுகிறது...!ரேவதிக்கு ராகம் புரிகிறது.

சுமை இறங்க வேண்டாமோ?

ரேவதிக்குத் தேவை; மாறுதல்-ஆறுதல்.

‘ராயல் சாலஞ்ச்’ துணை வருகிறது.

அவள் நகை சிந்தினாள்; சரணாகதியான நகைப்பாக இருக்கக்கூடும் அது. அடங்காத ஆசையை அடக்கமாட்டாமல், நெடிதுயர்ந்த முக்காலியை நெருங்கினாள். பவ்யமான பாவனை. பாவனையில், அவள் விரும்பாத பணிவு, அவளது விருப்பம் இல்லாமலே மிகுந்திருந்தது.