77
இப்போது அவள் எதையும் நினைக்கவோ அல்லது எதையும் மறைக்கவோ தயாராக இல்லை. அவள் ஒரு வினாடியாகிலும், தன்னை மறந்திருக்க எண்ணினாள். நேர்மையாக நினைத்தால், நினைத்தது நியாயமாக கை கூடுமாமே?
ஆத்திரத்துக்கும் அவசரத்துக்கும் சவால் விட்டபடி, மதுவில் ஒருவாய் பருகினாள். கனி இதழ்களில் நெருப்புக் கணி வெடிக்க, இதழ்கள் ரத்தச் சிகப்பு ஆயின.
தட்டினால், திறக்கப்படுவது கதவு.
"ஆய் குழலி...மை டியர் மோஸ்ட் குழலி! போன காரியம் பழம்தானேம்மா?’’
"செங்காயும் செம்பழமுமான ஒரு நிலைமைங்க, டாக்டர். அண்ணன் பம்பாயிலேயிருந்து இன்னம் திரும்பக் காணோமே.”
"மிஸ்டர் ஞானசீலனைப் பற்றித்தானே சொல்றே?”
"பின்னே என்னாங்க?’’
"பம்பாய் போய் ஏழு நாளாச்சுன்னு சொன்னாயே?’’
"ஆமாங்க, சொன்னேன். அங்கே தொழில் முறை யிலே என்ன சிக்கலோ, என்ன சங்கடமோ?’’
"மற்றப்படி அவருக்கு சொந்த வேலை ஒன்றும் இருக்காதே.’’
"நீங்கள் நினைச்சுக் குழம்புறது கணக்கிலே, அண்ணன் அங்கே தன்னோட திருமணம் எதையும் என்கிட்டே சொல்லாமல் செஞ்சிடமாட்டார்! ஒரு விஷயம். நிச்சயம்; அவர் எந்த நேரத்திலேயும் இங்கே சென்னைக்குத் திரும்பிடலாமுங்க!”
"மகிழ்ச்சி."
"அண்ணன் பேரிலே இவ்வளவு தொலைவுக்கு அக்கறை காட்டுறீங்களே, எங்கள் அண்ணாவை உங்க