79
கண்ணியமான கடமையாக்கும். நான் உங்கள் குழலிப் பொண்ணுங்க; என்னை நல்ல மனசோட நம்புங்க, அம்மா!" விம்மினாள் குழலி .
ரேவதி, தன்னைச் சீர்செய்து சமாளித்துக் கொண்டு, இதழ்க் கடையில் புன்முறுவலைக் கடைவிரிக்க முயற்சி செய்கிறாள். "குழலி, எங்களோட வாழ்க்கையின் கதை காரணமெல்லாம் உனக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்குது. ரொம்ப மகிழ்ச்சிதான். இதுவுங்கூட, நான் எதிர் பார்த்திராத 'சஸ்பென்ஸ்’ ஒண்ணும் கிடையாதுதான்! சரிசரி, இப்ப நீ சீக்கிரமாகக் கீழே போய்விடு. தேவைப்பட்டால், கூப்பிட்டுக் கிடுவேன்!...”
ஆனை தூள் பறந்தது.
குழலி கொடி மின்னல் ஆனாள்.
ரேவதி, 'படீ'ரென்று கதவுகளை ஆத்திரமாக அடைத்தாள்.
தொலைக்காட்சியில் இரவு நேரச் செய்திகள் வாசிக்கப்பட்டன.
ஆனால்-
வாசிக்கப்பட்ட உலகத்தின் செய்திகளைக் கேட்கத் தான் அங்கே நாதி இல்லை!
ரேவதி-டாக்டர் ரேவதி அழுது கொண்டுதான் இருக்கிறாள்-இன்னமும். அவளது உள்மனம் வாசித்துக் கொண்டிருந்த செய்திகளைக் கேட்கத் தான் அவளுக்குப் பொழுது சரியாகிவிட்டது.
அந்தரங்க அறை, அது.
ரேவதிக்குச் சொந்தபந்தம் கொண்ட கூடமும் அது தான்.
அங்கே, ஒளி வெள்ளம் பொங்கி வழிகிறது.