பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


ஆனாலும், ரேவதி இருட்டிலே தவித்தாள்; தடு மாறினாள்! "எனக்குச் சம்பந்தப்பட்ட என் பிரச்சினைக் கதை என்னிடம் வேலைக்கு இருக்கிற குழலிக் குட்டிக்கும் ஏனோ, எப்படியோ தெரிஞ்சி போயிடுச்சுதே? வாழ்க்கை யிலே எல்லா நிலைகளிலும் நானே உசத்தியாக நின்னு முன்னுரிமை பெற்று விளங்கவேணும் என்கிற இலட்சியத்துக்காகப் போராடி, மானம், மரியாதைக்காக அல்லும் பகலும் பாடுபட்டுக்கிட்டிருந்த எனக்குக் கடைசியிலே கிடைச்சிருக்கிற வெகு ம தி இப்படிப்பட்ட அவமானம் தானா?

கருமாரித்தாயே? என்னைச் சோதிச்சது போதாதா? எனக்கு உண்டான ஒரு நல்ல பாதையை இனியாச்சும் திறந்து விடமாட்டியா?...கல்லான உன்னாலே எப்படிப் பேச முடியும்? எனக்கு நானே விதியாகிப் போன பின்னே, என்னோட வழிதானே இனிமேல் எனக்குச் சதம்?"

விம்மல் தொடர்ந்தது. போதை தெளிந்த போதத் தோடு நிதானமாக இதயத்தைத் தேடிப்பிடித்துப் பலம் கொண்ட மட்டும் பிசைந்து கொண்டாள்.

"எல்லா வலியும் நாலைந்து வினாடிகளில் தீர்ந்து போய்விடும்!’’-பாய்ந்தாள், தடுமாறி வீழ்ந்தாள்; எழுந்தாள்: மண்ணைக் கவ்வ நேர்ந்த தோல்வி வெறியில் மறுபடி எதிரே பாய்ந்தாள்.

கைத்துப்பாக்கி நையாண்டித்தனமாகச் சிரிக்கிறது!

எப்படியோ அதை அழுத்திப் பிடித்து கைப்பிடிக்குள் அடக்கிக் கொண்டாள், ரேவதி. திரும்பவும் நப்பாசை. திரும்பிப் பார்க்கவே, மேசையிடம் கையேந்தினாள். பிச்சை கிடைத்திருக்க வேண்டும்.

அந்தத் திருமணப் புகைப்படமும் அந்தத் திருமணத்தாலியும் இப்போது அவளைக் கண்டு கைகொட்டிச் சிரித்தன போலும்!