இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
84
துப்பாக்கியை எறிந்தபடி ஓடினாள் வேகமாகவே ஓடினாள்.
கதவுகள் திறக்கின்றன.
ரேவதியின் கண்களும் திறக்கின்றன.
ஞானசீலன் நின்றார்!
"வாங்க... வாங்க!”
"ஊம்... ம்...ம்!”
அசலான மாப்பிள்ளையாகவே நின்றார், ஞானசீலன்,
"உள்ளே வாங்க...”
"உம்... உ.ம்..."
"நல்லா இருக்கீங்களா?”
"உங்கள் புண்ணியத்தாலே நான் நல்லா இருக்கேன், நீங்களும் நல்லா இருக்கீங்க தானே?’’
"ஒ! உங்கள் புண்ணியத்திலே, நானும் நல்லாவே இருக்கேன்!"
"கருமாரிதான் உங்களை அனுப்பி வைச்சாளா?’’
"எங்கள் குழலி என்னை அனுப்பி வைச்சுது!’’
"அப்படிங்களா?’’
"அப்படித்தாங்க!”
"உட்காருங்க...”
"உட்காரலாமா?’’
“ஏன் இப்படிக் கேட்கிறீங்க?”
"கேட்டது தப்புங்களா, அம்மணி?"
"தப்பு இல்லீங்களா, அய்யா?”
"மன்னிக்க வேண்டும். தவறு என் பேரிலே இருந்தா, என்னை மன்னிச்சிடுங்க!"