இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
115
- என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்!
- ஏதும் தோன்றாமல் தடுமாறுகின்றேன்!
- காணாத நிலையே கண்டதனாலே
- கங்கு கரையின்றிப் பொங்கு கடல் போலே ஆனேனே!
- இது கனவோ? அன்றி நனவோ?
- என தன்பே! நீ சொல்லாயோ? (என்)
- இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே
- இணையே இல்லாத இல்வாழ்விலே
- தேவைதனை உணர்ந்தே
- சேவை செய்து மகிழ்வேன்
- சிறந்த இன்பம் காணுவேன்!
- உறவாடும் காதல் சுகம் வரும் போது
- உனை மறந்தாலே அதிசயம் ஏது? கிடையாது!
- இது கனவோ அன்றி நனவோ?
- எனதன்பே ! நீ சொல்லாயோ?
தங்கப் பதுமை-1958
- இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி
- பாடியவர்: P. சுசிலா