இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
133
- வஸந்தன் : வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
- வாடாமல் இருக்கும் பூ என்ன பூ?
- மீனா : அன்புக் கணவனின் முன்னாலே மனைவி
- அழகாகச் சிந்தும் புன் சிரிப்பு!
- வஸந் : நெஞ்சம் ஒன்றாகி எந்நாளும் இன்பம் பெறவே
- சொந்தம் கொண்டாடச் செய்யும் புதுப்பூ என்ன பூ?
- மீனா : உண்டான ஆசை தன்னைச் சொல்லாமல் சொல்லி
- உள்ளம் ரெண்டைச் சேர்க்கும் நாலு கண்ணின் சந்திப்பு!
- (வண்டு)
- உள்ளம் ரெண்டைச் சேர்க்கும் நாலு கண்ணின் சந்திப்பு!
- வஸந் : உள்ளம் ஒன்றான பின்னாலே உருவெடுத்து
- தொல்லை தந்தாலும் இன்பம் தரும் பூ என்ன பூ?
- மீனா : எல்லோரும் இணையேதும் இல்லாத செல்வம்
- என்றே சொல்லும் பிள்ளைச் செல்வம் செய்யும் குறும்பு
- (வண்டு)
- என்றே சொல்லும் பிள்ளைச் செல்வம் செய்யும் குறும்பு
எங்கள் குலதேவி-1959
- இசை : K. V. மகாதேவன்