இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
194
- காட்டு மல்லி பூத்திருக்க
- காவல் காரன் பாத்திருக்க
- ஆட்டம் போட்டு மயிலைக் காளை
- தோட்டம் மேயப் பாக்குதடா!
- மாட்டுக்கார வேலா! ஓம்
- மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா!(காட்டு)
- கோட்டைச் சுவர் போல வேலி இருக்கு!
- குத்தும் கருவேல முள்ளுமிருக்கு!
- தோட்டக்காரன் கையில் கம்பு மிருக்கு!
- சுத்திச் சுழட்டவே தெம்புமிருக்கு!
- மாட்டுக்கார வேலா! ஓம்
- மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா!(காட்டு)
- போகாத பாதையிலே போகக் கூடாது-சும்மா
- புத்தி கெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது!
- மாடாகவே மனுஷன் மாறக் கூடாது!
- மற்றவங்க பொருளுமேலே
- ஆசை வைக்க கூடாது!
- மாட்டுக்கார வேலா! ஒம்
- மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா!(காட்டு)
வண்ணக்கிளி-1959
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்