இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
243
- புதிய வாழ்வு பெறுவோம்!-மதியினால்
- விதியை வெல்ல முயல்வோம்!
- கெதியை நொந்திடாமல்-காலக்
- கெதியை நொந்திடாமல்
- கடமையைச் செய்வோம்!
- (புதிய)
- உழவைப் போற்றி வளர்ப்போம்!-சகல
- உயிர்க்கும் உணவு அளிப்போம்!
- பஞ்சப் பிணியைத் தொலைப்போம்!-சமதர்மப்
- பாதை தன்னை வகுப்போம்!
- (புதிய)
- எழுத்தறிவில்லார் என்பவரே-இங்கே
- எவருமில்லாமல் செய்திடுவோம்!
- பகுத்தறிவாளர் பாசறையாய்ப்
- பாரில் நம் நாட்டை ஆக்கிடுவோம்!
- (புதிய)
- இந்த நாட்டின் எதிர்காலம்
- இளைஞர்கள் கையில் இருப்பதாலே-அவர்களை
- வளர்க்கும் மாதர் அறிவே வளர்ந்திடும்
- மார்க்கம் காணச் செய்வோம்!
- (புதிய)
அமரகவி-1952
- இசை : G. ராமநாதன்
- பாடியவர்: M.K. தியாகராஜபாகவதர்