இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
256
- ஆண்: ஆத்திலே தண்ணி வர
- அதில் ஒருவன் மீன் பிடிக்க
- காத்திருந்த கொக்கு அதைக்
- கவ்விக்கொண்டு போவது ஏன்?
- கண்ணம்மா! அதைப்
- பாத்து அவன் ஏங்குவதேன்? சொல்லம்மா!
- பாத்தி கட்டி நாத்து நட்டு
- பலனெடுக்கும் நாளையிலே
- பூத்ததெல்லாம் வேறொருவன்
- பாத்தியமாய் போவது ஏன்? கண்ணம்மா! கலப்பை
- புடிச்சவனும் தவிப்பது ஏன்? சொல்லம்மா!
- பெண்: னன்னானே னானே னானே
- னானே னன்னானே
- னன்னானே னன்னானே னானே னன்னானே
- ஆண்:பஞ்செடுத்து பதப்படுத்தி
- பக்குவமாய் நூல் நூற்று
- நெஞ்சொடிய ஆடை நெய்வோன்
- கண்ணம்மா!-இங்கு
- கந்தலுடை கட்டுவதேன்?
- சொல்லம்மா!