பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/286

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284


சத்தியமே லட்சியமாய் கொள்ளடா.
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!....(சத்)


(பாட்டு)
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!.....
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே-உன்னை
இடற வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே!
அத்தனையும் தாண்டிக் காலை முன் வையடா!-நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! (சத்)


குள்ளநரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்!
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும்!
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா-அவற்றை
எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா!...(சத்)


நீலமலைத் திருடன்-1957


K. V. மகாதேவன்


பாடியவர்: T. M. செளந்தரராஜன்