பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/295

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

295


ஜக்கன்: கள்ளத்தனமாக இரு காதலர்கள் பேசும்போது
எள்ளளவு ஓசையும் செய்யாது !-இது
எள்ளளவு ஓசையும் செய்யாது!
சேகர் : கப்பலேறி இங்குவந்த ரப்பர் வளைஇது எந்தக்
காரணத்தினாலும் உடையாது !-எந்தக்
காரணத்தினாலும் உடையாது !
(வேறு நடை)
செகப்புவளையல் கறுத்த கையில்
ஜிலு ஜிலுன்னு ஜொலிக்கும் !
கருப்பு வளையல் செவந்த கையின்
மதிப்பை அதிகமாக்கும் !
ஜக்கன்: கனத்த உடம்பு பெண்களுக்கு
காரு வளையல் இருக்கு !
கடகம் இது தலையணையா
உதவி செய்யும் நமக்கு !
(வேறு நடை)
சேகர் : பொன்னைப் போலவே மின்னும் கண்ணாடி
வளையல் ரொம்ப ஜோரு!-இந்த
வளையல் ரொம்ப ஜோரு!
ஜக்கன்:கையில் போட்டு ஆட்டினா புருஷனும் மயங்கி
கேட்டதைத் தருவாரு!-நீ
கேட்டதைத் தருவாரு!