பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76


பெண்: முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே!

ஆண்: வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே!
அல்லி விழி தாவக் கண்டேன் என்மேலே!

பெண்: வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே!
கண்ணெதிரில் காணுகிறேன் ப்ரேமையினாலே!

ஆண்: மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப்போலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே!

பெண்: விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே!
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே!

ஆண்: சிந்தை நிலைமாறியதாலே எந்தன் முன்னாலே!
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே!

உத்தமபுத்திரன்-1958

இசை G. ராமநாதன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் P. சுசிலா