பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78


வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்!
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்! (வண்ண}

வெண்ணிலவின் அழகை யெல்லாம்அவள் முகத்தில் கண்டேன்!
வேல்விழி வீச்சின் மின்னலினால் திசைமாறி நின்றேன்! (வண்ண)

அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்!
ஆடற்கலை இலக்கணத்தை அறியவரும் மயிலும்!
இன்னிசையைப் பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்!
இயற்கை யெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்! (வண்ண)

கன்னல் மொழி பேசும் அந்தக் கன்னியரின் திலகம்
கமலம்! என் கமலம்! செங்கமலம்! (வண்ண)

பாவை விளக்கு-1960

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: C. S. ஜெயராமன்