இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பா வருகிறார் !
I
குழந்தாய் ! என் குழந்தாய் !
இதோ உன் தந்தையின் கடிதம்,
என் குழந்தாய் !
எத்தனை முறை படித்தாலும் இன்பம் !
உன்னைப் பார்க்கவும், என்னைப் பார்க்கவும்
கப்பலில் வந்துகொண் டிருக்கிறார் !
என் குழந்தாய் !
II
குழந்தாய் ! என் குழந்தாய் !
அவர் போய் எத்தனை நாட்கள் !
என் குழந்தாய் !
உள்ளத்தின் உண்மையும் உரமும்
துரதிர்ஷ்டம் எதையும் வென்றுவிடும்.
இப்பொழுது துக்கம் - இனியோ ஆனந்தம்,
என் குழந்தாய் !
III
குழந்தாய் ! என் குழந்தாய் !
அவர் திருமுகம் காண ஆவல்,
என் குழந்தாய் !
அது வசந்த கால மல்லிகை !
மேகத்தில் தோன்றும் விண்மீன் !
வீடு நிறைந்த வெளிச்சம் !
4