பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அப்பா வருகிறார் !

I

குழந்தாய் ! என் குழந்தாய் !

இதோ உன் தந்தையின் கடிதம்,

என் குழந்தாய் !

எத்தனை முறை படித்தாலும் இன்பம் !

உன்னைப் பார்க்கவும், என்னைப் பார்க்கவும்

கப்பலில் வந்துகொண் டிருக்கிறார் !

என் குழந்தாய் !


II

குழந்தாய் ! என் குழந்தாய் !

அவர் போய் எத்தனை நாட்கள் !

என் குழந்தாய் !

உள்ளத்தின் உண்மையும் உரமும்

துரதிர்ஷ்டம் எதையும் வென்றுவிடும்.

இப்பொழுது துக்கம் - இனியோ ஆனந்தம்,

என் குழந்தாய் !


III

குழந்தாய் ! என் குழந்தாய் !

அவர் திருமுகம் காண ஆவல்,

என் குழந்தாய் !

அது வசந்த கால மல்லிகை !

மேகத்தில் தோன்றும் விண்மீன் !

வீடு நிறைந்த வெளிச்சம் !

4