இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நமது குழந்தை
I
விண்ணின்று வந்த பாப்பா.
நகை முகம், கதிர்வீசுங் கண்கள்.
கோவை இதழ்கள், கிளி மூக்கு
மெல்லிய சுருள், பொன்னவிர் தலை,
உரத்த குரல், மழலை நா.
II
இன்னும் எண்ணங்கள் எழவில்லை,
இன்னும் கவலைகள் உதிக்கவில்லை,
போற்றக் கிடைத்த புது மலர் -
அன்பு செய்யப்பெற்ற ஆன்மா .
III
ஒரு பொழுதும் சும்மா இராத பாப்பா,
நமது சின்னஞ் சிறு பாப்பா.
அரும்பெறல் அமிழ்தம் பாப்பா ,
ஆண்டவனே அதை அறிவார்.
மதயாஸ்பார்