பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நமது குழந்தை

I

விண்ணின்று வந்த பாப்பா.

நகை முகம், கதிர்வீசுங் கண்கள்.

கோவை இதழ்கள், கிளி மூக்கு

மெல்லிய சுருள், பொன்னவிர் தலை,

உரத்த குரல், மழலை நா.

II

இன்னும் எண்ணங்கள் எழவில்லை,

இன்னும் கவலைகள் உதிக்கவில்லை,

போற்றக் கிடைத்த புது மலர் -

அன்பு செய்யப்பெற்ற ஆன்மா .

III

ஒரு பொழுதும் சும்மா இராத பாப்பா,

நமது சின்னஞ் சிறு பாப்பா.

அரும்பெறல் அமிழ்தம் பாப்பா ,

ஆண்டவனே அதை அறிவார்.

மதயாஸ்பார்