இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காதலும் மணமும்
I
ஊர் அடங்கிவிட்டது,
என் கணவர் சுகமாய்த் தூங்குகிறார்,
ஆனால், என் துன்பமோ
என் கண்வழிப் பெருகும்.
II
என் அழகன் ஜேமி என்னைக் காதலித்தான்,
என்னை மணந்து கொள்ள விரும்பினான்,
ஆனால், அவன் கையிலோ காசில்லை,
மாலுமி வேலை பார்க்கச் சென்றான் -
எல்லாம் என் பொருட்டே !
III
அவன் போய் இரண்டு வார மாகவில்லை -
என் தந்தை கை முறிந்து விட்டது,
எங்கள் பசுவைக் காணோம்,
என் தாயார் நோயாகி விட்டாள் !
அப்பொழுதுதான் ராபின் கிரே
என்னை மணம் பேசி வந்தார்.
ஆனால் என் ஜேமியோ - கப்பலிலே !
23