இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறிவு கடந்த அகன்ற வெளி,
அதன் பனிபடர்ந்த பாகம்,
அங்கிருந்தே கவிஞனிடம்
விரைகின்றன கவிகள்.
அவன் பாடும் பாடல்கள்
அவனுடையன என்போம்,
அவனுடையன அல்ல என்போம்;
அவன் பெறும் புகழ்
அவனுடையது என்போம்,
அவனுடையது அல்ல என்போம்.
இரவு பகலாய் எண்ணங்கள் தொடர்கின்றன.
செவி சாய்ப்பான். தேவி எழுதென்றால்
பணிவதே அவன் கடன்.