பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பொய் உண்மையை நாடுகிறது,
        வௌவால் சூரியனைக் கேலி செய்கிறது.
இந்த வேடிக்கையைப் பாருங்கள் !

III


தற்கால உலகின் கிண்ணத்தில்
        நான் பார்ப்பதென்ன ? - விஷம்.
ஆம், அதில் பாம்புகள்
சுருண்டு கிடக்கின்றன !

IV


சிம்மத்தின் இரத்தம் சில சமயம்
        பலவீனர் தேகத்திலும் ஓடுவதுண்டு
நீர்த் துளியிலும்
        நெருப்பின் உணர்ச்சி தோன்றுவதுண்டு !
எழுந்திடுக !

74