இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆங்கிலர்க்கு ஒரு கீதம்
I
ஆங்கில மக்காள்! உங்களைத் தாழ்த்தும் தனவந்தர்க்கு
நீங்கள் உழுவது ஏன்?
உங்களைத் துன்புறுத்துவோர்க்கு உயர்ந்த உடைகள்
கஷ்டத்தோடும் கவலையோடும் நெய்வது ஏன்?
II
அந்த நன்றியற்ற ஆண் தேனீக்கள் உங்கள் வேர்வையை
வடிக்கும், உங்கள் குருதியைக் குடிக்கும்.
ஆயினும் அவைகட்குத் தொட்டில் முதல் சுடுகாடுவரை
உணவும் உடையும் தந்து காப்பது ஏன்?
82