இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
130
ஆடும்
‘சீ! மூடுடா வாயை குட்டு வெளியானதும் இப்படி ஒரு புளுகா?’ என்று சீறினார் ராஜநாயகம். அருணாசலம் பொறுமையோடு பேசினான் .கடிதமும் புரளி;அல்லி கடத்தப்பட்டிருப்பதும் மோசடி என்ற முடிவை இருவரும் எட்டினர். உடனே ‘டாக்ஸி பிடித்து பலராமையா சினிமா கம்பெனியை நோக்கி விரைந்தனர்.
வழியில் பரதகலாகேசரி கனகசபை எதிர்ப்பட்டார்.
‘சென்டிரல் ஸ்டேஷனிலே அல்லியைப் பார்த்தேன்,’ என்று கனகசபை முடிப்பதற்குள் அருணாசலம் டாக்ஸி டிரைவரை, ஊக்கினான். “ஐயோ அல்லி’ என்று ஆசனத்தில் சாய்ந்தார் வாத்தியார் ராஜநாயகம்.