பக்கம்:ஆடும் தீபம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

131


பாரதியின்


அல்லி


எல்லோரையும் போலவே தொடர்ந்து இந்தப் பகுதியைப் படித்துக்கொண்டு வந்த நான் *சபாஷ் போட்டுக்கொண்டிருந்தேன். அடுத்து என்ன?’ என்று ஒவ்வொரு இதழ் வரும் நாளையும் எதிர்பார்த்திருப்பேன். இதே கேள்வியை வாசகர்கள் என்னிடம் கேட்கவேண்டும் என்பதற்காக திரு. எல்லார்வி அவர்கள் கதையைபுதிய கோணத்தில் திருப்பி விட்டு விட்டார்கள். வீரத்தமிழ் மகளான அல்லியை கண்ணீர்விட்டு, நல்லதங்காள் மெட்டில் அழுது பாடவைக்க ஏனோ என் மனம் இடம் தரவில்லை. முதலில் அவள் அதை விரும்ப வேண்டுமே! பாரதியும், முறம் கொண்டு புலியைத் துரத்திய தமிழ்ப் பெண்ணும் அவளுக்குத் தைரிய முட்டுகின்றனர்.அவளுக்குப் பிறந்த அந்தத் துணிச்சலில் இதோ, என் பேனா ஓடத் தொடங்கிவிட்டது!

ஏ. எம். மீரான்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/132&oldid=1325699" இலிருந்து மீள்விக்கப்பட்டது