பக்கம்:ஆடும் தீபம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



152

ஆடும்


யப் போகிறான் என்பதாகயார்தான் நம்பி இருப்பார்கள்? இதோ பாரு அல்லி, இப்போ ரொம்பப்பேசுவதற்கு நேரமில்லை. நீ இதைவிட்டுப்போகலாம்.

‘நீ?” என்று அல்லிகேட்க வாயெடுத்தாள். ஆனால் மனதில் அந்தக்கவலையே ஏற்படவில்லை. இன்று இன்னாசி இப்படி நடந்துகொண்டு விட்டதற்காக அத்தனைவெறுப்பும் மறைந்து விடுமா? அவனிடம் அவளுக்கு ஒரு அபிமானம் ஏற்பட்டு விடுமா?

‘அல்லி,ஒரு தடவை உனக்காகக் கொலை வரைக்கும் போகத் தயாராக இருந்தேன். வெறியிலே செய்தது!’’ என்றான் இன்னாசி. வயிற்றுவடுவைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். ‘இன்னொருதடவை அதுக்குப் போக விரும்பவில்லை. உன்னை மறந்து விட்டுத்தான் இருந்தேன்.’

இருந்தவனாகத் தெரியவில்லையே’ என்று மறுத்தாள் அல்லி. இல்லாவிட்டால் இப்போ ம்றுபடியும் என்னைத் தேடிக் கொண்டு இங்கே வந்திருக்க மாட்டியே? நீங்க இரண்டு பேரும் திரும்ப...”

அல்லியை முடிக்கவிடவில்லை இன்னாசி. அல்லி! அவன் குரல் சற்றுக்கடுமையாகவே வந்தது.'சாத்தையனைக் கொன்றுவிட்டு உன்னைத் துன்புறுத்தவே நான் வந்திருப்பதாகச் சொல்லவருகிறாய்என்று எனக்குத்தெரியும். ஆனால்சொல்கிறேன். ஐந்தாறு மாதங்களாக ஆஸ் பத்திரியிலிருந்துவிட்டு செத்துப்பிழைத்தவனாக வெளியே வந்ததும்,சினிமாவில் காலில் சதங்கை கட்டிக்கொண்டு நீ ஆடினதைப் பார்த்து விட்டு, உன்னைக் காணும் ஆவலுடன் நான் இங்குவந்ததும் உண்மைதான். நீஇருக்கிற இடம் அறிந்து, அருணாசலத்துக்கும் உனக்கும் திருமணம் நடக்கப் போவதை அறிந்து, உன்னை முரட்டுத்தனமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/153&oldid=1341254" இலிருந்து மீள்விக்கப்பட்டது