பக்கம்:ஆடும் தீபம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

ஆடும்


என் நம்பிக்கைக்கு உயிர்

மலை உச்சியை நோக்கிச் செல்லுகையில் ஏற ஏறத் தான் கையில் இருக்கும் சுமையின்- கனத்தை உண்மையான கனத்தை நன்கு உணர்கிறோம். கதை முடிவு என்றஉச்சி சமீபிக்கிறது.எனது பாரத் தின் பளுவும் அதிகமாகியிருக்கிறது.திரு.வாசவன் முதல் திரு. செல்லப்பா வரை நெய் விளக்கைப் பிரகாசமாக்கிவிட்டார்கள். பூவை என்னைவிளக்கருகே நிறுத்திவிடத் தைரியமாகத் தீர்மானித்தார். அந்தத்தைரியமே என் நம்பிக்கைக்கு உயிராக விளங்குகிறது.

இத்தனை நாட்கள் நரகப்படுகளத்திலும் வெறி பிடித்த கொலைக்களத்திலும் அவதிப்பட்ட அல்லிக்கு எப்போதுதான் மன நிம்மதி கிடைக்கும்?

இப்போது கிடைக்க வழிவகுத்து விட்டேன் நான். எப்படி?

அதை பூவை அடுத்தாற்போல் சொல்லுவார்!

பி.வி.ஆர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/159&oldid=1389259" இலிருந்து மீள்விக்கப்பட்டது