164
ஆடும்
அந்தக் குப்பையில் சமூக நண்டுகளின்-புழுக்களின் பேச்சு மறைந்துதானே ஆகவேண்டும்?
பட்டணம் நெருப்பில் வீழ்ந்த அவள் வெளியேறுகையில் புடமிட்ட தங்கமாகத்தான் மாறினாள்.
மாங்குடி அவளை அழைத்தது. கலயமும் கஞ்சியுமாக ஒரு நாள் தாயார் நின்ற காட்சி கண்முன்நிழலாடியது. என் பிணத்தைக்கண்டு அன்று சிரித்தாயே அல்லி, இன்று: உன்னைக்கண்டு சமூகம் சிரிக்கும்படி விடலாமா?’ என்று அவள் நினைவில் அடங்காத தகப்பனார் கேட்பது போலத் தோன்றியது. அல்லி ஓடி விட்டாள்’ என்று மாங்குடி ஓலமிட்டால், அந்த ஓலம் அவளுடைய தாய் தகப்பன் இருவருடைய ஆவிகளுக்குக் கூடக் கேட்குமே?
அவள் திரும்பவேண்டும்; மாங்குடிதான் இனிமேல் அவளுக்குத் தாயும் தந்தையும்-நிலம் தான் குழந்தைவீடுதான் கணவன்.
சமையற்காரியம்மாள் அழைக்கவராமலே அல்லிபோய்ச் சாப்பிட்டாள். இது ராஜநாயகத்துக்குக் கூட வியப்பைத் தந்தது.
‘அல்லி”
அவருடைய அன்புக் குரலில் ஒரு நெகிழ்ச்சி.
- “இ தோ... !”
“நான் ஒன்று தீர்மானித்திருக்கிறேன்!”
என்ன?”
நாம் இரண்டு பேருமாக சென்ன்யை விட்டு நாலுஇடங்களுக்குப்பிரயாணம் செய்யலாம் என்று.