இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தீபம்
29
விடுடா அவள் கையை, சாத்தையா ‘நீ விடு என் கண்ணாட்டியோட கையை!”
கொன்றுடுவேன்!” வேல்க் கம்பாலே சரிச்சுடுவேன்!’
இருவரும் இழுத்த இழுப்பில் அல்லியின் கைகள் அழுந்திப் புண்ணாயின. அழுவதற்கோ அலறுவதற்கோ சக்தியை இழந்துவிட்டிருந்த அவள் அண்ணாந்து வானத்தை நோக்கினாள். மழை மேகங்கள் நிலவை மறைத்துக் கொண்டிருந்தன. மானத்தை மறைத்துக் கொள்ள வகை தெரியாம்ல் இருபக்கங்களிலும் சுவர் களைப்போல நெருங்கிக்கொண்டிருந்தவர்களுக்கிடையே நசுங்கிக் கொண்டிருந்தாள் அல்லி!