பக்கம்:ஆடும் தீபம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

31


வர்ண மாறுபாடுகள் இருந்தால், அழகாக இருக்கும் என்று ஆசைப்படும் ரசிக உள்ளம் வர்ணத் தாள்களைச் சுற்ற வைத்து மகிழ்கிறது.

‘ஆடும் தீபம்’ வளர வளர அவ்வித வர்ண விஸ்தாரங்களைப் பெறுவதும் சாத்தியமே.விதம்விதமான மனோபாவமும், வெவ்வேறு ரக நடையும் கொண்டவர்கள் அமைக்கும் கோலம் எதிர்பாராத புதுமைகளை ஏற்கலாமன்றாே? எதுஎவ்வாறாயினும், கெட்டுப் போகாத கன்னியாக மாங்குடியை விட்டு வெளியேற திரு. வாசவன் வழிகாட்டிய அல்லியை நல்லவளாகப் பட்டணம் கொண்டு வந்து சேர்த்து விட்டேன். இனி அவள் என்ன ஆவாள் என்பதை உங்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர் பார்க்க வேண்டியவன் ஆகிவிட்டேன். அவள் கதியை நண்பர் ‘பூவை தான் அறிவாரா?

வல்லிக்கண்ணன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/32&oldid=1389375" இலிருந்து மீள்விக்கப்பட்டது