82
ஆடும்
“ஆமாம்; உறுதியாக!’
“சரி, எனக்கும் சம்மதம் தான்; ஆனால் எப்படிச் செய்து கொள்ள வேண்டும் தெரியுமா? இரண்டாம் பேர் அறியாமல் மோதிரம் மாற்றியோ பதிவு செய்துகொண்டோ அல்ல.ஊருக்குக் கடிதம் போடு:உன் அப்பா அம்மாவை வரவழை. அவர்கள் சம்மதம்தான் முக்கியம். வடபழனி கோவிலில் அல்லிக்குத் தாலிகட்டிக் கல்யாணம் செய்து கொள்:”
காலம் ஓடியது. அறந்தாங்கியில் ஷண்முகானந்தா டாக்கீஸ் ஆரம்பமானது. 'குழந்தையே குடும்பத்தின் விளக்கு' என்ற புதுப் படத்தைப் பணம் செலவழித்துக் கொண்டு வந்து காண்பித்தார்கள்.
பத்தணா கொடுத்து சேர் டிக்கட் வாங்கிக் கொண்டு வெகு மிடுக்குடன் சென்று அமர்ந்த இன்னாசி யதேச்சையாகப் பின்புறம் திரும்பிப் பார்த்தான். மடிப்புக் கலையாத சலவை உடைகளில் தெளிக்கப்பட்ட மருக்கொழுந்து சென்ட்'டின் மணம் மூக்கைக் குடைய சிங்கப்பூரான் உட்கார்ந்திருந்தான்.
இரண்டு பேரும் நினைவின்றி வரப்பில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததும், இரவுக் காவலுக்காக லயன் கரைக்குப் போகும் ரெயில்வே காங்கி ஒருவன் அவர்களைக் கண்டு பாவ புண்ணியத்துக்குப் பயந்து, ஊருக்குள் போய் ஜனங்களைக் கூட்டிவந்து இருவரையும் தஞ்சை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்ததும் இன்னாசிக்கு நினைவில் எழுந்தன. -
சாமான்களை ஏற்றிவரும் லாரி அப்பால் சென்றவுடன் அது எழுப்பிய புழுதியும் அடங்கி விடுவது போல திருக்