பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

பூவையர் கை தீண்டலும்
அப்பூங்கொம்பு மேவி அவர்
பொன்னடியில் தாழ்ந்தனவே

என்று புகழேந்தி பாடியது போல, கொடியடியில் நிற்கும் மடக்கொடியார் பிடிப்பதற்கு முன்னமேயே வளைந்து கொடுத்துத் தாழும் கொம்புகளையும் அல்லவா சிற்பி அழகுற வடித்திருக்கிறான். இந்த வடிவங்களையே பார்க்கிறீர்கள் பக்கத்தில் உள்ள படங்களில்.

இத்தகு சலபாஞ்சிகை வடிவங்கள் இரண்டு தமிழகத்தில் உருவாகி எழில் ஒவியங்களாக நிற்பதைக் காணவே ஒரு நடை கட்டலாம் திரிபுவனத்தை நோக்கி. இனி நான் வேண்டாம் என்றாலும் நீங்கள் கேட்கவா போகிறீர்கள்?