112
ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்
பாடியிருக்கிறார் என்பர்.
தென் பாலுகந்தாடும்
தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பாலு கந்தான்
பெரும் பித்தன் காணேடி
என்று சாழல் விளையாட்டில் ஈடுபட்ட பெண் ஒருத்தி கேள்வி போடுகிறாள். இதனைக் கேட்ட மற்றொரு பெண்.
பெண்பால் உகந்திலனேற்
பேதாய் இருநிலத்தோர்
விண்பாவியோ கெய்தி
விடுவர்காண் சாழலோ
என்று பதில் கூறி இருக்கிறார்.
அம்பலத்தே கூத்தாடி
அமுது செயப் பலிதிரியும்
நம்பனையும் தேவனென்று
நண்ணுவதும் என்னேடி
என்பது ஒரு பெண்ணின் கேள்வி,
நம்பனையும் மாமா கேள்
நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசாஎன்று
ஏத்தினகாண் சாழலோ
என்பது இக்கேள்விக்குப் பதிலாய் அமைகிறது. இக் கேள்வி பதில்தான் எவ்வளவு சுவையாக அமைந்திருக்கிறது.
தில்லையில், பூவல்லி கொய்து, கோத்தும்பி விரட்டி, பொன்னுசல் ஆட்டி, பலபல பாக்களைப் பாடியபின், தன் இதயக் குயிலையும் கூவ விட்டிருக்கிறார்.