பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிரிக்கத் தெரியுமா?

லிபாக்ஸ் பிரபுவின் வாழ்க்கையில் ஒரு ரஸமான சம்பவம். லார்ட் இர்வின் என்ற பெயரோடு சில வருஷங்களுக்கு முன் இந்தியாவின் வைஸ்ராய் பதவியில் அமர்ந்திருந்தவர்தான் . சுமார் இருபது இருபத்தைந்து வயது காளையாயிருந்தபோது ஒரு நாள் பயணம் புறப்பட்டார். அவருடைய சொந்த நாடாகிய ஆங்கில நாட்டிலே செல்லும் ரயிலிலே ஏக நெருக்கடி. வண்டியில் ஏறினார். உட்கார இடம் தேடினார்.

இரண்டு சீமாட்டிகளுக்கு இடையில்தான் கொஞ்சம் இடம் கிடைத்தது. அவர்களுக்கு மத்தியிலே உட்கார்ந்து கொண்டார். அங்கே எல்லா இடத்தும் ஆணும் பெண்னும் சரி நிகர் சமானமே. இரண்டு சீமாட்டிகளுக்கும் வயது முப்பது முப்பத்தைந்துக்கு மேல் இருந்தாலும் அவர்கள் மணம் ஆகாதவரே. இதையும் தெரிந்து கொண்டார் ஹலிபாக்ஸ்.

ரயில் சென்றது, பூமியின் அடியில் அமைந்திருக்கும் டன்னல்கள் வழியாக எல்லாம் சென்றது. அப்படிச் செல்லும் போது நீண்ட டன்னல் ஒன்று குறுக்கிட்டது. டன்னல் உள்ளே ரயில் போகும் போது எங்கும் ஒரே இருட்டு. ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாத இருட்டு. இந்தச் சமயத்தில் நமது வாலிப ஹலிபாக்ஸ் சிறுகுறும்பு ஒன்று செய்தார்.

தனது வலதுகையின் புறங்கையை வாயில் வைத்து 'இச்' என்று இரண்டு முத்தமிட்டு விட்டு நேரே நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். முத்தமிட்ட சத்தம்தான் இரண்டு சீமாட்டிகளுக்கு கேட்டது. பிரபுவை முத்தமிட்டது