பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



144

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

இப்படிச் சிந்தித்துக் கொண்டே வந்த நான் வீடு சேர்ந்ததும். கம்பனது ராமாயணத்தை எடுத்து ஒரு புரட்டு புரட்டினேன். அங்கு ஒரு பாட்டு என் கண்ணில் பட்டது.


பணிரங்கப் பெரும் பாயல்
பரஞ்சுடரை யாம் காண
அணி அரங்கம் தந்தானை
அறியாதார் அறியாதார்

ஜனகனிடம் ராமனது குல முறை கிளத்துவதற்கு முன், விஸ்வாமித்திரர் போடும் பீடிகை இது. உண்மைதான் பக்தர்களுடைய அறியாமைதான் எப்படி எப்படி யெல்லாம் வெளிப்படுகிறது. இந்த அறியாமையைத் துடைக்க கம்பன் எப்படி உதவுகிறான்.

அப்படி உதவுகிறபொழுதெல்லாம், தான் எவ்வளவு அறியாமை உடையவன் என்று பணிவாய்த் தெரிவித்துக் கொள்கிறான். அப்படித் தெரிவித்துக் கொள்வதில் தான் எவ்வளவு அழகு. நான் அறியேன், நான் அறியேன் என்று சொல்லும் போது, இறைவனே நேரில் நம் முன் வந்து, இவனை நம்பாதீர்கள் இவன் அறியேன், அறியேன் என்று சொல்லுவதெல்லாம் பொய். இவனே எல்லாம் அறிந்தவன், என்றல்லவா கூறத் துவங்கிவிடு கிறான். இவன், உண்மைத் தத்துவங்களை அறியாதவன் என்று சொல்ல முனைகிறார்களே, அவர்களே அறிவிலிகள்.

எல்லாம் வல்ல இறைவனை விராதன் துதிக்கிறான். விராதன் துதிப்பதாகக் கம்பன் துதிக்கிறான்.

வேதங்கள் அறைகின்ற
உலகெங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னில்
படிவங்கள் எப்படியோ

என்று பாடுகிறான். மேலும்