தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
145
'ஒதங்கொள் கடலன்றி
ஒன்றினொடு ஒன்றுஒவ்வா
பூதங்கள் தொறும் உறைந்தால்
அவை உன்னைப் பொறுக்குமோ'.
என்றும் ஐயுறுகிறான். ஆம் பெரிய கேள்விக் குறி ஒன்றேயே போடுகிறான். இதற்கு விடையே அறியாத வன் போலக் கையையும் விரிக்கிறான். மறுபடியும் ஆரம்பிக்கிறான்.
தாய் தன்னை அறியாத
கன்றில்லை; தன் கன்றை
ஆயும் அறியும்;
உலகின் தாயாகி ஐய!
நீ அறிதி எப்பொருளும்
அவை உன்னை நிலை அறியா
மாயை இது என் கொல்லோ
என்று மீண்டும் தன் அறியாமையை வெளிப்படுத்துவதன் முலம் அவனுடைய அறிவுடைமையையே அறிவிக்கிறான். இப்படி யெல்லாம் பெரிய பெரிய உண்மைகளை எல்லாம் கேள்விக் குறிபோட்டே விளக்க முயல்வது கம்பனது தனி உரிமை அல்லதான். இறைவனை நினைந்து நினைந்து, உருகி, உருகிப்பாடும் அப்பர் பெருமானும்,
நின்னாவார் பிறர் இன்றி
நீயே ஆனாய்
நினைப்பவர்கள் மனத்துக் கோர்
வித்தும் ஆனாய்
மன்னானாய், மன்னவர்க் கோர்
அமுதம் ஆளாய்
ஆ.பெ.அ.நெ-10