இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்றொரு நாள் மாலையிலே ஆற்றங்கரையிலே நடந்த ஒரு கூட்டத்துக்குச் சென்றிருந்தேன் நான். பிரபல பேச்சாளர் பேச்சு ஒன்று நடந்தது அங்கு பேச்சாளர் அடுக்கு மொழிகளை அள்ளி வீசினார்; இளைஞர் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பினார். பேச்சுக்கு இடை யிடையே கேள்விகள் வேறு போட்டார்.
- ஆலயங்கள் ஏனையா?
- அபிஷேகங்கள் ஏனையா?
- கோலங் கொடிகள் ஏலையா?
- கொட்டு முழக்கம் எனையா?
- பாலும் பழமும் வைத்து நிதம்
- பணிந்து நிற்பது ஏனையா?
- சீலம் பேணும் உள்ளத்தைத்
- தெய்வம் தேடி வாராதோ?
- ஆலயங்கள் ஏனையா?
என்று கேட்டபோது நீண்ட காலமாகவே, கோயில், குளம், சமயம், சாஸ்திரம் என்று பழகியவர்களும் நிலை குலைந்தனர். மேலும் மேலும் கேள்விகள் பிறந்தன.
- தண்ணார் மதியும் புரிசடையும்
- தாங்கும் தையல் பாகன் என
- எண்ணாது ஒருவன் சொன்னது கேட்டு
- எவனோ சொன்னான் அவனைக் கேட்டு
- அண்ணா சொன்னான் அது போலின்று
- அடுத்த தம்பி சொல்கின்றான்
- கண்ணால் ஈசன் திருமேனி
- கண்டார் எவரும் உண்டோ சொல்!
- தண்ணார் மதியும் புரிசடையும்