பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



168

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

பற்றிக் கொள்ள விரைந்தபோது ஆசாமி அந்தர்த்தியான மாகி விட்டார்.

இவையெல்லாம் சென்ற சப்தஸ்தான விழாவன்று திருவையாற்றை அடுத்த திருப்பூந்துருத்தியில், இன்று இடிந்து கிடக்கும், அப்பர் மடத்தில் அரைமணி நேரம் இருந்ததின் பலன். மாலைப் பொழுதில்,மணற்பரப்பில் மல்லாந்து கிடந்தபோது சிறிது நேரம் கண்மூடியிருக்கிறது. கருத்து ஓடியிருக்கிறது எங்கெல்லாமோ. இப்படி அனுபவம் ஒரு நாள். ஒரு நாள் என்ன பல நாள் - வாழ்நாள் முழுவதும் பெறலாமே இப்படிப்பட்ட அனுபவத்தை.