இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
தத்துவத்தை அற்புதமான ஒரு ஆங்கிலப் பாடலில் வெளியிடுகிறான் - காதல் கவிஞன் - ஷெல்லி. அந்த ஆங்கிலக் கவிதை மலரை தமிழ் மணத்துடன் அளிக்கிறான் ஒரு கவிஞன், ஆம் தமிழர்களுக்குத்தான்
- நீண்டு வளர்ந்த நெடு முடியை நிதம்
- நீருண்ட மேகம் தழுவலையோ
- நீலக் கடலிற் புரண்டு வரும் திரை
- போய் ஒன்றொன்றனை கவ்வலையோ
- ஓடும் சிறு நதி ஆடி வந்தே கடல்
- ஓடு கலந்து குலாவலை யோ
- ஓல மிடும் வண்டும் கோல மலர்களில்
- ஒன்றியிருந்து தேன் உண்ணலையோ
- இந்நிலம் தன்னிலே தன்னந் தனியாக
- எய்திடும் ஒருயிர் எங்கு முண்டே
- என்னைக் கலந்து நீயின்பந் தராவிடில்
- யாது பொருள் இந்தக் காதலுக்கே
என்றெல்லவா கேட்கிறான். அப்படித் தன் காதலியைக் கேட்டுக் கொண்டேதானே காதற்கடவுள் - கல்லுருவில் காட்சி கொடுக்கிறான்.