பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



86

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்


எண்ணற்ற காட்சிகளைக் காட்டி நம்மையெல்லாம் ஒரே ஆனந்த அனுபவத்தை அல்லவா அடையச் செய்கிறான். இவன் செய்தது பிரமாதம் இல்லை. இவன் சொல்லையும் இசையையும் வைத்து இத்தகைய அற்புதத்தைச் செய்கிறான். சொல்லும் இசையும் இல்லாமல் கல்லையும் உளியையும் வைத்தே நாடகம் நடத்திக் காட்டுவோம் நாம் என்கிறான், ஒரு தமிழ் நாட்டுச் சிற்பி. தாருகாவனத்து ரிஷி பத்தினியர் கதையையே எடுத்துக் கொள்கிறான். அதைக் கல்லுருவில் நடத்திக் காட்டி வெற்றி பெறுகிறான்.

தாருகாவனத்துக்கு நடந்தே வருகிறான் சிவபெருமான் கங்காளன் உருவத்தில். நீண்டுயர்ந்த மகுடம், தலையை அலங்கரிக்கிறது குழையும், சுருள் தோடும் காதுகளில் மிளிர்கின்றது. தோளிலே வாகுவலயம்; மார்பிலே பொன்னாரம், காலிலே பாதுகை, ஒரு கையிலே மயிற் பீலி, மற்றொருகையில் துடி, இந்தத்துடியை முழக்கிக் கொண்டு, பக்கத்திலே வரும் மானுக்கும் புல்லருத்திக் கொண்டு அசைந்த நடை போட்டு, கன ஜோராக வருகிறான் கங்காளன். இவன் துடி ஒலிக்கத் துடி ஒலிக்க, துடிக்கிறது உயிர்கள் எல்லாம். பர்ன சாலையில் உள்ளே கிடந்த ரிஷி பத்தினிகளும் ஒவ்வொருவராக வெளியே வருகிறார்கள்.

வந்தவள் ஒருத்தி ஒசிந்த நோக்கோடு அழகனைக் காணுகிறாள். ஒருத்தி முகிழ்த்த முறுவலோடு தன்னை