பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

91


அப்பர் பெருமான் கயிலாயத்தை நேரே தரிசிக்க விரும்பினார், காலால் நடந்தே புறப்பட்டு விட்டார். கால்கள் தேய்ந்து நடக்க முடியாமற் போயிற்று என்றாலும் விட்டாரில்லை. கையைத்தரையில் ஊன்றி ஊன்றி நடந்தார். அதிலும் தளர்ச்சி ஏற்பட்டபின் மார்பாலேயே ஊர்ந்து சென்றார். எப்படியும் கயிலை சேர்ந்து விட உறுதி பூண்டார். இந்த உறுதியை இறைவன் கண்டார். இறைவன், அவர் நின்ற இடத்திலேயே ஒரு திருக்குளத்தை தோற்றுவித்து அதில் மூழ்கி எழுந்திருக்கச் சொன்னார். அப்படி மூழ்கியவர் தான் திருவையாற்றுக்கு வந்தார். அங்கேயே கயிலையைக் கண்டார். இப்படி யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றார் அப்பர். அங்கும் கயிலாயத்தில் உள்ள நிலையை கண்டார். ஆம் காணுகின்ற பொருள்களில் எல்லாம் உயிர்களில் எல்லாம் சிவத்தையும் சக்தியையும் கண்டார்.

காதல் மடப் பிடியோடும்
களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்
பேடை மயிலோடும் கூடி
பிணைந்து வருவென கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்
வரிக்குயில் பேடை யோடு ஆடி
வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்